Your Ad Here

Views

டேய்! சாகுல் இங்க வாடா சீகிரம் வாடா!

என்னடா இசக்கி?

"இங்க வா சொல்றேன். முக்கியமான விஷயம் வா சீக்கிரம்."

என்ன விஷயம் சொல்லுடா

இங்க வந்து உக்காரு சொல்றேன்

ஆறாம் வகுப்பிலிருந்து என்னுடன் படித்து வருகிறான் இசக்கி. நல்ல நண்பன் ஆணால் கொஞ்சம் ஏடா கூடாமா ஏதாவது பேசுவான். எட்டாம் வகுப்பிற்க்கு வந்த பிறகு அவனுடைய பேச்சில் காமம் தலைவிரித்து ஆடியது. அனைவருக்கும் உணர்ச்சிகள் இருக்குமென்றாலும் அவனுக்கு கொஞ்சம் அதிகமோ என யோசிக்க வைத்தது அவனுடைய பேச்சும் செய்கையும். அன்றும் அதே போல்தான்

"டேய் இங்க பாருடா"

"என்னடா இது"

"நேத்து முடிவெட்ட போனல்ல அங்க இருந்த்ச்சி. என்னனு எடுத்து பாத்தேன். சின்ன பசங்க எல்லாம் பாக்க கூடாதுன்னு புடிங்கி வச்சிடாங்க தெரியாம சுட்டுட்டு வந்துட்டேன். எப்படி?"

"எங்க காட்டு. என்னடா இவ்ளோ பெருசா இருக்கு. இப்டியாடா இருக்கும்"

"சத்தம் போடாத"

"அடுத்த பக்கம் திருப்பு"

"பொறுமையா பாரு. இங்க பாரு"

"டேய் வேனாண்டா யாருக்காவது தெரிஞா சார்ட சொல்லி குடுத்துவங்க"

"புக்குகுள்ள வச்சி பாத்தா யாருக்கும் தெரியாதுடா"

"எங்க காட்டு. எனடா நாலு போட்டாதான் இருக்கு"

"கடைல நெரயா வச்சிருக்காங்கடா. அடுத்தவாட்டி எடுத்துட்டு வரேன்."

எப்படியாவது வாரம் ஒரு அந்த மாதிரி புத்தக்கதோடு வந்துவிடுவான். பார்பவன் அவளுக்கு இப்படியா இருக்கும் என்று ஒவ்வொரு நடிகையின் பெயராக சொல்லி கேட்ப்பான். தெரியாது என்று சொல்லி அலுத்துவிட்டது எட்டாம் வகுப்பு முடிந்த்து ஒன்பதாம் வகுப்பில் நான் வேறு பள்ளியிலும் அவன் வேறு பள்ளியிலும் சேர்ந்ததனால் விடுமுறையில் மட்டும்தான் சந்திக்க முடியும்.

மீண்டும் கல்லூரியில் தான் எங்கள் கூட்டணி அமந்தது. இடைப்பட்ட காலத்தில் அவன் புத்தகம், படம் என்று நிறைய தெரிந்து கொண்டன். மீண்டும் அதே மாதிரி பேச்சுக்கள்.அதிலிருந்து அவனை காம்க் கொடூரன் என்று தான் அழைப்பது.

ஒரு நாள் " சாகுலு வாகினில Romantic Revenge போட்டுருக்காண்டா நல்ல இருக்காம் ஹாஸ்டல்ல இருகவங்வ எல்லம் பாத்துட்டாங்க. மத்தியானம் போலாமா?" என்றான் இசக்கி

"வேண்டாம். Machine I டா அந்த ஆளு பீரிடுக்கு வரல்லனா அவ்ளோதான் லேப்ல பெயில் ஆக்கிருவான்."

"ஏதோ வேலை இருக்காம் அப்பொவே போய்டான்"

"சரி"

மதிய உணவு முடிந்து திரையரங்குகு சென்றோம்.

"இசக்கி கூட்டமே இல்லடா"

"வா உள்ள போய் மொதல்ல டிக்கட் எடுத்துரலாம்" என்று டிக்கட் எடுக்க சென்றவர்களுக்கு மாப்பெரும் அதிர்ச்சி.

"சாகுலு ஓடுடா"

"என்ன ஆச்சி"

"அங்க பாரு Machines I வாத்தியார் நிக்கிறாண்டா." அந்த முயற்சி தோல்வியில் முடிய அடுத்த நாள் அவன் மட்டும் பார்த்து விட்டு வந்து கதை சொல்லி என்னை ஏத்திவிட்டான்.

அடுத்த முறை இசக்கி மற்றும் மற்ற நன்பர்களுடன் சேர்ந்து ஒரு படம் பார்க சென்றோம். (பெயர் ஞபகம் இல்லை. பெயரா முக்கியம்) நல்ல வேலை யாரும் இல்லை. .படமும் ஆரம்பம் ஆகிவிட்டது. படம் ஓடி அரை மணி நேரமாகியும் எதும் இல்லை

"என்னடா ஒன்னையும் கானோம். நலருக்கும்னு சென்ன"

"படம் வேஸ்டுடா வா போலாம்."

"டேய் நில்லுடா குடுத்த காசுக்கு முழுசா பாத்துட்டு போவோம்" என்றதுக்கு

"நான் சொல்றனுல்ல எனக்கு தெரியாதா வா இதுக்கு மேல ஒன்னும் வராது" என்று வற்புறுத்தி அழைத்து சென்றான்.

அப்போதும் லட்சியம் நிறைவேறாமல் செல்ல வேண்டியதாகிவிட்டது. பிறகு மூண்றாம் ஆண்டு முடிந்து நான் சென்னைக்கும் அதற்க்கு பிறகு துபாய்க்கும் சென்றதால் அவனிடம் தொடர்பே இல்லாமல் ஆகியது. விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த போது எதோச்சையாக அவனை பார்க்க வேண்டியது வந்தது. நண்றாக மாறி இருந்தான்.

"இசக்கி எப்படி இருக்க"

"நீ எங்கடே இருக்க"

"துபாய்ல இருக்கேண்டா"

"ஒரு போன் கூட பன்னல. எனக்கு கல்யானம் ஆகிருச்சி தெரியுமா"

"டேய் உன்ன மாதிரி ஒரு காமக் கொடுரன கட்டிக்கிட்டு அந்த பொன்னு என்ன கஷ்டப் படுதோ"

"அவா என்ன விட ஸ்ட்ராங்டா"

???????????????



edit post

2 Reply to "ஜாடிக்கேத்த மூடி"

கடைக்குட்டி on Monday, June 22, 2009 4:06:00 AM

தொடர்ந்து கலக்கவும் :-)

 

ஷாகுல் on Monday, June 22, 2009 4:51:00 AM

வருகைக்கு நண்றி கடைக்குட்டி