Your Ad Here


போக்கிரியை ஹிந்தியில் சல்மான் கானை வைத்து எடுத்த பிரபு தேவா தற்ப்போது அதே சல்மான் கானை வைத்து மோஸ்ட் வாண்டட் என ஒரு படம் இயக்க போகிறராம். நாயகி வேறு யார்? நயன் தாராதான். சந்தேகமா இருந்தா இங்க போய் பாருங்க மக்கா.






சல்மான் கான் முதலில் பிரபு தேவாவிடம் கதைய கேளுங்க. கதைய கேட்க்காம, ராமன் கிட்ட வில்ல கேட்டேன்னு பாட்டு படிச்சீங்கன்னா படம் ஊத்திக்கும். அட்தே டைரக்டர் அதே ஹீரோயின் எனக்கென்ன்மோ அதே கதைதான் நினைக்கிறேன்.

ராமன் கிட்ட வில்ல கேட்டேன் அத ஹிந்தில எப்பிடிங்க படிக்கனும்?






இந்த இடுகையின் இணைப்புகள் edit post

தின இதழ் என்ற இனைய இதழ் நாம் எழுதுவதற்க்கு பரிசு கொடுக்கிறதாம். அதுவும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கள் புத்தகமாகவும் வெளியிடப்படுமாம். மின்னஞலில் அறிவித்திருக்கிறார்கள். பூந்து விளையாடுங்க மக்கா.



அவர்கள் அனுப்பிய மின்னஞல்:

* நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
* உங்களின் கோபத்தை எழுத்துக்களாய் வெளிப்படுத்துங்கள்
* உங்களின் சமூக பார்வைகளை கட்டுரைகளாய் பதியுங்கள்
* உங்களின் ஆலோசனைகளை செய்திகளாய் எழுதுங்கள்.
* உங்களின் கற்பனைகளை கதைகளாய், கவிதைகளாய் எழுதி அனுப்புங்கள்.



மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முதன் மூன்று ஆக்கங்களுக்கு
பரிசுகளும் உண்டு.

எழுத்துக்களை தமிழின் universal எழுத்துருவில்தான் எழுதி அனுப்ப
வேண்டும்.


பிரசுரத்திற்கு ஏற்கப்படும் அனைத்து ஆக்கங்களும் வருட இறுதியில்
புத்தகமாக வெளியிடப்படும்.



உங்களின் முழு விவரங்களையும் உடன் எழுதி அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :- D I N A I T H A L DOT COM AT
GMAIL DOT C O M


ஆசிரியர்
தின இதழ்
DINAITHAL DOT COM



இந்த இடுகையின் இணைப்புகள் edit post


நாளை தீபாவளி கொண்டாட காத்திருக்கும் அனைத்து அன்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பாதுகாப்பான முறையில் வெடி வெடித்து தீபாவளியையும் விடுமுறையையும் மகிழ்சியாகவும் பாதுகாப்பானதாகவும் கொண்டாடுங்கள். எங்கள் கம்பெனியில் தீபாவளிக்கு விடுமுறை அளித்திருகிறார்கள். நிர்வாகி மற்றும் அனேக பணியாளர்கள்
வட இந்தியர் ஆதலால் அவர்களுக்கு சனி கிழமைதான் தீபாவளி ஆதலால் நானும் விடுமுறையை கொண்டாடிவிட்டு ஞாயிறு
அன்று சந்திப்போம்.

சில நாட்களுக்கு முன்பு இந்தோனேஷியா கடல் பகுதியில் தடுத்து வைக்கப்பட்ட தமிழர்களின் ஒரு பென் குழந்தை எங்களை உங்கள் குழைந்தைகளாக நினைத்துக் கொள்ளுங்கள் ஆஸ்திரேலியா இல்லை என்றாலும் வேறு எதாவது நாட்டுக்கு எங்களை செல்ல அனுமதியுங்கள். இலங்கையில் வாழ முடியாது என கோரிக்கை வைத்திருக்கிறார். அவருக்கும் ஒரு வாழ்த்தை கூறிக் கொண்டு ..................................................

இலங்கை அகதிகள் முகாம் சர்வதேச விதிமுறைகளுகு ஏற்ப்ப பாராமரிக்கப்ப்டுவதாக சொன்ன காங் எம்பிகளுக்கும் வாழ்த்துக் கூறுவோம்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!



இந்த இடுகையின் இணைப்புகள் edit post

நேற்று முந்தினம் நான் இட்ட பதிவிற்க்கு அன்பரசன் பச்சையப்பன் என்கிற முகம் தெரியாத நன்பர் கிழ்கண்டவாறு பதிலளித்துள்ளார்

அவரது பதில்

anbarasan pachiyappan
to பொதிகை எக்ஸ்பிரஸ்
date 14 October 2009 06:26
subject Re: பொதிகை எக்ஸ்பிரஸ்
mailed-by gmail.com
Signed by gmail.com
hide details 06:26 (10 hours ago)
what to say
1- THEY HAVE BEEN OFFERED TO MIGRATE AT THE TIME OF FREEDOM
2 THEY HAVE BEEN OFFERED TO SHARE THE POWER FROM LONG BACK
AS HIGH AS PRESIDENT , VP WE CAN ADD MORE
THE TRUTH IS MAJORITY MUSLIMS ARE EASY WITH OTHERS AND MORE COMFORT THAN MANY MUSLIM COUNTRIES
CLAIMS ARE MISCONCEIVED AND MAL-DICTATED ACCUSING FOR SENSATION IS EASY

அவர் மட்டுமல்ல பலர் இதே போல் தான் சிந்திக்கிறார்கள். அவருக்கு பதிலளிக்கும் முகமாக இப்பதிவு!


//1- THEY HAVE BEEN OFFERED TO MIGRATE AT THE TIME OF FREEDOM//

அதாவது இந்துக்கள் சுதந்திரத்தின் போது முஸ்லீம்களை பாக்கிஸ்தானுக்கு செல்ல அறிவுறித்தினர்களாம். நீங்கள் ஏண் செல்லவில்லை என் கேட்கிறார். அங்கு செல்லாமல் இங்கு இருந்து கொண்டு ஏண் கூப்படு போடுகிறீர்கள் என் கேட்கிறார் போலும். நேரிடையாக கேட்காவிட்டாலும் இது அவருடைய பதிலில் தொக்கி நிற்ப்பதாகவே எனக்குப் படுகிறது.

நான் கேட்க விரும்புவது எங்களை பாகிஸ்தான் போக சொல்ல அவர்கள் யார்? நாங்கள் ஒன்றும் வேறு நாட்டிலிருந்து இங்கு குடியிருக்கவில்லையே. எனது முன்னோர்கள் இந்நாட்டில் பிறந்தவர்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்க்காக அந்நியர்களாகி விடுவார்களா? இந்தியா பிரிக்கப் பட்டதே சங்பரிவாரங்களின் விருப்பத்தினங்கதான். அவர்கள் எதிர் பார்த்தது முஸ்லீம்கள் அனைவரும் பாக்கிஸ்தானுக்கு சென்றுவிடுவார்கள் எனபது ஆனால் பெரும்பான்மையான முஸ்லீம்கள் தன் சொந்த நாட்டிலேயே தங்கிவிட்டனர்.
இது தான் அவர்களின் ஹிந்து ராஜ்ய கணவிற்க்கு பலத்த அடியாக விழுந்தது. இதை எதிர்பாராத பரிவாரங்கள் சுதந்திரம் முதலே முஸ்லீகளின் மேல் திட்டமிட்ட தாக்குதலை மேற்கொண்டது. இப்போது கூட முஸ்லீம்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்-ன் கேஷங்களில் முஸ்லீம்கள் அனைவரும் பாக்கிஸ்தானுக்கு போங்கள் அல்லது கபர்ஸ்தானுக்கு போங்கள் என்பதுவே என்பதை அறீவீரா நன்பரே! ஆக அவர்கள் சொல்லும் வாதத்தை தான் நீங்களும் சொல்கிறீர்கள். எமக்கு எங்கும் செல்ல வேண்டிய அவசியம் ஏற்ப்பட்வில்லை.

இது எங்களது நாடு எங்கள் முன்னோர்களும் உயிரைக் கொடுத்து
சுதந்திரம் வாங்கினேம், எங்களை எங்கும் போக சொல்ல யாருக்கும் உரிமையில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக இங்கு பதிவு செய்கிறோம்.

//THEY HAVE BEEN OFFERED TO SHARE THE POWER FROM LONG BACK
AS HIGH AS PRESIDENT , VP WE CAN ADD MORE //

முஸ்லீம் மதத்தை சார்ந்தவர்கள் ஜனாதிபதி, துனை ஜனாதிபதி போன்ற பதவிகளை வகித்திருகிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை அவை அனைத்தும் அதிகாரமில்லாத தலையாட்டி பதவி என நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஜனாதிபதி பதவி கொடுக்கும் இந்திய அரசு அவர்களுக்கு முக்கிய மற்றும் அதிகாரமிக்க பதவியை கொடுக்க முன்வரவில்லையே ஏண்? ஊளவுத்த் துறையில் ஒரு முஸ்லீம் கூட கிடையாது என்பது தெரியுமா உங்களுகு. IPS முடித்த எத்தனை முஸ்லீம்கள் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் முஸ்லீம் என்ற காரணத்தினாலயே ஒதுக்கப்படுகிறார்கள் என்பதும் தெரியுமா நண்பரே!.

இந்தியாவில் 1991 பாபர் மசூதி இடிப்புக்கு பிறகே பல் குண்டு வெடிப்புகள் அறங்கேறியது. இதை காரணமாக வைத்து பல முஸ்லீகள் திட்டமிடப்பட்டு கருவருக்கப்பட்டனர். அதை காவல் துறையும் வேடிக்கைப் பார்த்தனர். ஏண்? கவல் துறை உயரதிகாரங்களில் முஸ்லீகள் தொடர்ந்து ஒதுக்கப்படுவதாலயே. மேலும் மகாரஷ்ட்ராவில் எந்த அசாம்பாவிதம் நடந்தாலும் அது முஸ்லீகள் தான் காரணம் அவர்களை நோக்கி மட்டும்தான் விசாரனை இருக்க வேண்டும் என காவல் துறை உயரதிகாரிகளிடமிருந்து உத்தரவு என காவலர்கள் சொல்லுவது உங்களுக்கு தெரியுமா? மால்கோன் குண்டுவெடிப்பு ஒரு உதாரணம் தான். அதே போல பல குண்டுவெடிப்புகள் சங் பரிவாரங்களால் நடத்தப்பட்டு முஸ்லீம்களின் மீது போடப்படது. அவ்வளவு ஏண் அதே திருட்டு புத்தியை தென்காசியிலும் காட்டினர். தன் அலுவலகத்துக்கு தானே குண்டு வைத்து விட்டு முஸ்லீம்கள் தான் வைத்ததாக நாடகமாடினர் கயவர்கள்.

அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போதுதான் முஸ்லீம்களுக்கு எதிரான் திட்டமிடப்பட்ட குஜராத் கலவரம் நடத்தப்பட்டது. தென்காசியில் ஐம்பது ஆண்டுகளாக இருக்கும் பள்ளிவாசலை விரிவுபடுத்தி கட்ட கூடாதென முட்டுகட்டை போடும் பரிவார கூலியாட்கள் காரணம் முஸ்லீம் விரோத போக்கு அவர்களுக்கு ஊட்டப்பட்டதே. நீதிமண்றம்ம் அனுமதி அளித்தும் அதை செயல்படுத்த வேண்டிய காவல் துறையும் அவர்களுக்கு சார்பாக இருப்பது மகா கேவலம். எந்த ஆட்சி வந்தாலும் இப்படிதான் அதில் மாற்றமேதும் இல்லை.
ஏனென்றால் அங்கு காவல் துறையில் முஸ்லீகளுக்கு இடம் மறுக்கப்படுவதே காரணம். முஸ்லீம்கள் அணி திரண்டு போராடக்கூட கூடாது என நினைத்த ஆளும் வர்கங்கள் தமுமுக TNTJ போன்ற அமைப்புகளில் இருந்தால் பாஸ்போர்ட் விசரனையின் போது தவறான தகவல் அளிக்கப்படுகிறது. இந்திய சட்டப்படி எஅவரும் எநத இயக்கத்திலும் சேரலாம் என்ற உரிமையையே கேலிகூத்தாக ஆக்குகின்றார்கள் அதிகாரவர்கங்கள். காரணம அதிகார மட்டத்தில் முஸ்லீகள் திட்டமிட்டு ஒதுக்கப்படுவதுதான்.

தமுமுக போன்ற அமைப்புகளில் இருந்தால் பாஸ்போர்ட் போன்ற முக்கிய ஆவணங்கள் கொடுக்க கூடாதென அதிகார வர்கங்களிடமிருந்து வாய்மொழி உத்தரவு வந்திருகிறதாக தகவல். இதுதான் சுதந்திர போராட்டத்தின் போது தன் சமுதாத்தை பற்றி கூட கவலைப் படாமல் தன் இன்னுயிரை நீத்தவர்களுக்கும் ஆங்கிலம் படிப்பதே ஹராம் என பள்ளிவாசல்களிலேயே உத்தரவிட்ட அந்த போராளிகளுக்கு இந்தியா செய்ய்யும் நன்றி கடன் தான் இதுவா? நாடு உனக்கு என்ன செய்தது என கேட்காதே! நீ நாட்டிற்க்கு என்ன செய்தாய் என கேள்!! என்ற உளுத்துப்போன வாதத்தை சொல்ல போகிறீர்களா? அதை கேட்க கூடிய மனநிலையில் நாங்கள் இல்லை.


//THE TRUTH IS MAJORITY MUSLIMS ARE EASY WITH OTHERS AND MORE COMFORT THAN MANY MUSLIM COUNTRIES
CLAIMS ARE MISCONCEIVED AND MAL-DICTATED ACCUSING FOR SENSATION IS EASY//

பெரும்பான்மையான முஸ்லீகள் இல்லை ஐயா அனைத்து முஸ்லீகளும் அனைத்து மதமக்களுடன் நல்லுறவை பேனவே விரும்புகிறோம். பரிவார கூலியாட்கள் அவகளின் உற்ற நன்பர்கள் தவிர எமது அண்டை வீட்டார்களிடம் மாமன் மச்சான் என்றுதான் பழகுகிறோம். அதில் எந்த மாற்றமும் எப்போது வரப்போவதில்லை. ஏண் சம்மந்தமே இல்லாமல் இதில் முஸ்லீம் நாடுகளை இழுக்கிறீகள். அவர்கள் தான் அளவுகோலா? எதை comfort என்கிறீர்கள்? கடுமையான தண்டனை இல்லாததையா? அதுதானென்றால் அந்த comfort சவுதியை தவிர மற்ற முஸ்லீம் நாடுகளில் கிடைக்கிறது. எப்படி comfort ஆக இருகிறார்கள். குஜராத்தில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட்ட கொலைகளாளா? அல்லது முஸ்லீம் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு என்கெளண்டரில் போட்டுதள்ளுவதன் மூலமா? அல்லது தீவிரவாதி என கூறி விசாரனையின்றி சிறையிலடைப்பதனாலா? இப்படி பல சொல்லிக் கொன்டே போகலாம். இதானாலா நாங்கள் comfort ஆக இருக்கிறோம்.

நாங்கள் கேட்பது எல்லாம் எங்களை வாழ விடுங்கள் என்பதுதான் இது எங்களின் உரிமை. அது மறுக்கபப்டும் போது தீவிரவாதம் தலைதூக்குகிறது. இந்து தீவிரவாதம் ஒழிந்தால் கட்டமைக்கப் பட்ட இஸ்லாமிய தீவிரவாதம் தானாகவே முடிந்து விடும். அதிகார வர்க்கம் காரணமில்லமல் கொலை செய்தால் அவர்களை ஒண்றும் செய்ய இயலாதவன் பொது இடத்தில் குண்டு வைக்கிறான். இதுதான் கோவை உட்பட நாட்டின் பல இடங்களில் நடந்தது, இது முஸ்லீம்கள் மட்டுமல்ல துரோகமிழைக்கப்பட்ட அனைத்து சமுதாயமும் இதைத்தான் செய்கிறாது. தீவிரவாதி, லவ் ஜிகாத், தாடிவைத்தவெனல்லம் தாலிபான் என திட்டமிட்டு எங்களின் மேல் தாகுதல் நடத்தாமல் எங்களள வாழவிடுங்கள்.
ஆணால் வட இந்தியாவில் உள்ளது போன்று முஸ்லீம் விரோத்ப் பொக்கு தமிழ் நாட்டில் இல்லை. குஜராத் உட்பட அனைத்து வட மாநிலங்களில் புரமோஷனுக்காக முஸ்லீம்களை கொல்லுவ்து தான் இப்போது ஃபேஷன். கொல்லப்பட்டது முஸ்லீம் என்றால் அவன் தீவிராவதியாகத்தான் இருப்பான் என்ற அவர்களின் மணோபாவம் தான் இதற்க்கு காரனம். இது இனியும் எந்த மதிரியான விளைவுகளை ஏற்ப்படுத்துமென தெரியவில்லை.

கடைசியாக ஒன்று எங்களுக்கு தடை ஏற்ப்படுத்தப் பட்டால் நாங்கள் எப்பாடு பட்டாயினும் அத்தடையை நீக்குவோம் என கூறுகிறோம். இன்ஷா அல்லாஹ்!




இந்த இடுகையின் இணைப்புகள் edit post


அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட கான முடிவதில்லை. நாம் சிறு வயதில் சாப்பிட்டிருப்போம். இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்ப்டுகிறது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான். அப்படிதான் எங்கள் வீட்டில் ஒரு நாள் மதிய உணவை முடித்து விட்டு மீதம் இருந்த சாத்திற்க்கு தண்ணிர் உற்றி வைத்து விட்டோம் , சிறிது நேரத்தில் ஒருவர் தனக்கு பசிகிறது ஏதாவது சாப்பிட கொடுங்கள் என கேட்க எங்க அம்மா அவரிடம் இப்போதான் தண்ணிர் ஊற்றினேன் குழம்பு ஊற்றி கொண்டு வரவா அல்லது தண்ணிரோடு சாப்பிடுகிறீர்களா என கேட்க தண்ணி ஊத்தியாச்சா நான் பழைய சோறு சாப்பிட மாட்டேன் எனக்கு வேண்டாம் என கூற, இப்போதான் ஊற்றினேன் பழைய சோறு இல்ல என எடுத்து கூறியும் அவர் எனக்கு வேண்டாம் என நடையை கட்டிவிட்டார்.

அப்போதே அப்படி என்றால் இக்காலத்தில் சொல்லவே வேண்டாம். பழைய சோறு என்றாலே காத தூரம் ஓடுகிறோம். ஆணால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருகிறதாம். உணவுப்பாதை சீராக இருந்தால் அவுட்லெட்டும் சீராகிவிடும். காலையில் கழிவறயில் மல்லு கட்ட வேண்டாம். இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிற்ப்பு சக்தி கிடைகிறதாம். காய்சால் பேன்ற நோய்களிடம் இருந்து காக்கிறது பண்றி காய்ச்சல் உட்பட.

காலை உணவாக பழைய சாத்தை உண்டால் உடல் லேசாகவும் சுறு சுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தன்னிர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுதும். அதுமில்லாமல் இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல் இல்லமல் காலையில் ஃபிரியா போலாம். இதனை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறந்துவிட்டதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி பிரதீப் கூறுகிறார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகிவிடுகிறது. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குண்மாகிவிடும். எல்லாவற்றிர்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராம்ல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.

அதனாலதான் நம்ம ஆளுங்க ஒரு சட்டி பழைய சாதம் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்யமுடிந்திருகிறது போலும். காலையில் சாண்ட்விச், பீட்ஸா, பர்கர் என கழித்து திரியும் தமிழ் மக்களே இன்றிலிருந்து பழைய சோறு சாப்பிட்டு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம். அப்புறம் பழைய சாதம் செய்ய தெரியுமா? (என்ன கொடுமை சார் இது எதுகொல்லாம் கிளாஸ் எடுக்க வேண்டியாத இருக்கு) பொங்குன சோத்துல தண்னிய ஊத்திட்டு அடுத்த நாள் கலைல திறந்து பாருங்க கம கம என பழைய சோறு தயார். இதற்க்கு கைகுத்தல் அரிசி சிறந்தது. நம்ம வீட்டல் போய் கைகுத்தல் அரிசியில் சோறு பொங்க சொன்னால் நம்க்குதான் குத்து கிடைக்கும் என அஞ்சுபவர்கள் ஒரு ரூபாய் அரிசி கூட உபயோக்கலாம். சூடான சாததில் தண்னிர் ஊற்ற கூடாது. ஆறிய பின்பு மண்டட்டியில் போட்டு தண்னிர் ஊற்றி மறு நாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்று இருக்கும். மதியம் வரை பசிக்காதாம்.

டிஸ்கி 1 : இவ்வளவு சொல்லுறிய நீ என்ன பழைய சோறா சாப்புடுற என நீங்கள் கேட்பது தெரிகிறது. என்ன செய்ய நங்க தான் பல வருடங்களுக்கு முண்பே ஃபாரினர்ஸ் ஆயிட்டோம்ல.

டிஸ்கி 2: என்னடா பழைய சோறைப் பற்றி எழுதிவிட்டு புதுச் சோறு படம் பேட்டுருக்கானேனு பாக்குறிங்களா. என்ன செய்றதுங்க பழைய சோறு படம் கிடைகுமா என கூகிள் தேடிப் பாத்தா இது தான் கிடைத்தது. கவலை வேண்டாம் உங்கள் மானிட்டரில் தண்னிர் ஊற்றி விட்டு நாளை காலையில் மோர் மற்றும் சின்ன வெங்காயத்துடன் வந்து பாருங்கள் பழைய சாதமாக மாறி இருக்கும். என்ன சரியா?



இந்த இடுகையின் இணைப்புகள் edit post

சத்தியமார்க்கம் இனைய தளத்தில் வந்த இந்த கட்டுரையை இங்கு பதிவது அவசியம் என கருதியதால் இப்பதிவு. இனி கட்டுரை.......


ஒரு நாட்டின் நீதி, நியாயம், பாதுகாப்பு ஆகியவை நீதித்துறை, காவல்துறை, உளவுத்துறை, இராணுவத்துறை போன்றவற்றால் உறுதிப்படுத்தப்படுகிறது. இதில் முதல் இரண்டு விஷயங்களைத் தவிர்த்து மூன்றாவது விஷயத்தை உள்/வெளி தீய சக்திகளிடமிருந்து நாட்டு மக்களை காவல்துறை, உளவுத்துறை, இராணுவத்துறை போன்றவை பாதுகாக்கின்றன. நாட்டு மக்களிடையே நீதி, நியாயத்தை நீதித்துறை நிர்வகிக்கிறது.

உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயகக் குடியரசான இந்தியாவில், நாடு விடுதலை பெற்ற நாள் முதலே நாட்டுப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும் பாதுகாப்புத் துறைகள் பெரும்பாலும் முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை அனைவரும் அறிவர். இதில் முக்கியமாக உளவுத்துறையின் முக்கிய அதிகாரங்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்பட்டு விடாமல் மிக கவனமாக நாட்டு நிர்வாகம் செயல்பட்டு வந்திருக்கின்றது. இந்திய மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதத்திற்கும் அதிகமாக வாழும் முஸ்லிம் சமுதாயத்திற்கு, நாட்டின் அதி உன்னதத் துறைகளில் ஒன்றான உளவுத்துறையில் ஓர் இடம் கூட இல்லை என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம் இல்லை.இதன் பின்னணியில் திட்டமிட்ட சதி தொடர்கிறது என்பதைச் சாதாரணமாக சிந்திக்கும் எந்த ஒரு பாமரனும் விளங்கிக் கொள்வான்.

அதே போன்றே காவல்துறை மற்றும் இராணுவத்துறைகளில் முஸ்லிம்கள் பெருவாரியாகப் புறக்கணிக்கப்படுவதும் நாட்டில் இச்சமுதாயத்திற்கு எதிராக நடத்தப்படும் திட்டமிட்டத் தாக்குதல்களிலும் துர் பிரச்சாரங்களிலும் இவ்விரு துறைகளும் மிக அதிகமாக பயன்படுத்தப் பட்டு வருவதும் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியக் குடிமக்களாக நாட்டின் எல்லாவித வசதிகளையும் அனுபவிக்க அடிப்படை உரிமை பெற்ற முஸ்லிம் சமுதாயம், தங்களுக்கான பாதுகாப்பு, கொஞ்சம் கொஞ்சமாக அருகி வருவதை நன்றாக அறிந்திருந்தும் இன்னமும் ஒரு சிறு நம்பிக்கையுடன் பொறுமையைக் கைவிட்டு விடாமல் அமைதியாக வாழ்ந்து வருவதன் காரணம், "தங்களுக்கு நீதி, நியாயம் மறுக்கப்படாது; சத்தியம் ஒருநாள் வெல்லும்" என்ற நீதித்துறையின் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலாகும். ஆனால், அதற்கும் சமீபகாலங்களில் சாவுமணியடிக்கப்படுகிறதோ என்ற சந்தேகங்கள் முளை விட ஆரம்பித்துள்ளன. அதற்குத் தகுந்தாற் போன்றே, பாரபட்சமற்று நடுநிலையாக நாட்டில் நீதி, நியாயத்தை நிலைநாட்ட வேண்டிய நீதித்துறையிலும் கறுப்பு ஆடுகள் புகுந்து விட்டதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன.

இதற்கு உதாரணமாக பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டலாம். நாட்டில் நடக்கும் உப்பு சப்பில்லா விஷயங்களிலிருந்து ஹிந்துத்துவத்திற்குக் காவடி தூக்கும் விஷயங்கள் வரை தேவையெனில் நேரடியாக எவ்வித மனுவோ, புகாரோ இன்றியே அவ்விஷயங்களில் தலையிட்டுக் கருத்தும் உத்தரவுகளும் பிறப்பிக்கும் நீதித்துறை, முஸ்லிம்களின் விஷயங்கள் எனும் போது மட்டும் கண்ணைக் கட்டிக் கொள்கின்றன.

திட்டமிட்டே முஸ்லிம்களின் மீதும் முஸ்லிம் இயக்கங்களின் மீதும் செய்யாத விஷயங்களை தலையில் கட்டும்,

  • தென்காசி குண்டு வெடிப்புகளிலிருந்து மாலேகான் குண்டுவெடிப்பு வரை நாட்டில் நடக்கும் தீவிரவாத, பயங்கரவாத நிகழ்வுகளாகட்டும்
  • சொராபுதீன் ஷேக் முதல் பட்லா ஹவுஸ் சம்பவங்கள் வரை முஸ்லிம்களைத் தேடிப் பிடித்து, சிட்டுக் குருவிகளைப் போல் சுட்டுக் கொன்று விட்டு, "பயங்கரவாதிகள் என் கவுண்டரில் கொல்லப்பட்டனர்" எனப் பொய்க் கதை பரப்பும் பூச்சுற்றல்களாகட்டும்
  • குஜராத், மும்பை, பாகல்பூர், சூரத், கோவை நரவேட்டைகள் முதல் பாபரி மஸ்ஜித் இடிப்பு வரை அவற்றுக்காக நியமிக்கப்பட்ட கமிஷன்கள் குற்றவாளிகள் எனக் கைக்காட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கைகட்டிக் கொண்டிருப்பதாகட்டும்,

முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட எந்த ஒரு அநியாயத்திலும் நீதி, நியாயம் வழங்குவதில் நீதித்துறை பாரபட்சத்துடன் அநீதி இழைத்தே வந்துள்ளது.

சமீபத்தில் இந்நிலை மாறி, முஸ்லிம் சமுதாயத்தின் மீதும் இஸ்லாத்தின் மீதும் சங்கபரிவார அமைப்புகளும் காவல்துறையும் பார்ப்பனீய ஆதரவு ஊடகங்களும் இணைந்து நடத்தும் திட்டமிட்ட காழ்ப்புணர்வு வதந்திகளை நீதித்துறைகளும் அப்படியே ஏற்றெடுத்து, நாட்டின் மிக உயர்ந்த, உன்னத பீடத்தில் நீதியைக் காப்பாற்ற வேண்டிய நிலையிலிருக்கிறோம் என்பதை நீதித்துறை மறந்து, சங்கபரிவாரத்தின் பிரச்சார பீரங்கிகளாக மாறி நீதித்துறையையே களங்கப்படுத்தும் விதத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது நேரடியாகவே தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்துள்ளன.

இதன் நேரடி உதாரணம், முஸ்லிம்கள் தாடி வைக்கும் விஷயம் தொடர்பாக மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள முஹம்மது சலீம் என்ற மாணவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த ஒரு வழக்கில், "தாடி வைப்பது தாலிபானிசமாகும்" என நீதிபதி மார்க்கண்டேய கட்சு தலைமையிலான குழு அதிகப்பிரசங்கித்தனமாக, வழக்குக்குத் தொடர்பில்லாத கருத்தைத் தெரிவித்ததாகும்.

"அவரவர் அவரவரின் மதத்தைச் சுதந்திரமாக பின்பற்றி வாழலாம்" என அடிப்படை உரிமை வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, இஸ்லாத்தின் மீது தவறான எண்ணம் தோன்றும் விதத்தில் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி, கருத்தும் தீர்ப்பும் அளித்தார் நீதித்துறைக்கே களங்கமான கட்சு. அந்தத் தீர்ப்பை எதிர்த்து மனம் தளராமல் போராடியதால் முஹம்மது சலீமுக்கு, இன்னமும் கறைபடியாமல் இந்திய அரசியல் சாசனத்தையும் சட்டத்தையும் மதிக்கும் மற்றொரு நீதிபதியால்நியாயம் கிடைத்தது.

இது நாட்டின் அதி உன்னத உயர் பீடமான உச்சநீதி மன்றத்தில் நடந்தது என்றால், தற்போது இச்சம்பவம் நடந்து 6 மாதங்கள் முடியும் முன்னரே உச்சநீதி மன்றத்தின் அடுத்த இடத்தில் இருக்கும் ஓர் உயர்நீதி மன்றத்தில் அதனைப் பின்பற்றி மற்றொரு அநீதத் தாக்குதல், முஸ்லிம் சமுதாயத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ளது.

கேரள உயர் நீதிமன்றத்தின் முஸ்லிம் சமுதாயம் மீதான இத்தாக்குதலுக்குக் காரணமானச் சொல்லப் படும் நிகழ்வு:

கேரள மாநிலம் பத்தனம் திட்டை பகுதியிலுள்ள செயிண்ட் ஜோன்ஸ் கல்லூரியில் பயிலும் இரு எம்.பி.ஏ மாணவிகள் இஸ்லாத்திற்கு மதம் மாறத் தீர்மானித்துள்ளனர். முன்னர் இவர்கள் இருவரும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் ஷாஹின்ஷா என்பவரையும் கேரள அரசுப் பேருந்தில் தற்காலிக நடத்துனராகப் பணிபுரியும் சிராஜுதீன் என்பவரையும் விரும்பித் திருமணம் செய்துள்ளனர். இவர்கள் இஸ்லாத்திற்கு மாறுவதாகத் தகவல் கிடைத்ததும் அப்பெண்களின் பெற்றோர் காவல்நிலையத்தில், "தங்கள் மகள்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாகவும் அவர்களை மானபங்கப்படுத்த முயன்றதாகவும்" கூறி அவ்விருவர் மீதும் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவ்விருவர் மீதும் காவல்துறை வழக்கு பதிவுப் செய்துள்ளது. இதற்கிடையில் வழக்குத் தொடுக்கப்பட்ட இருவரும் உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளனர்.

பெற்றோரின் புகாரை மறுத்து, "தங்களின் சொந்த விருப்பப்படியே இஸ்லாத்திற்கு மாறியதாகவும் தாங்கள் விரும்பியே திருமணம் செய்து கொண்டதாகவும்" அவ்விரு பெண்களும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். சாதாரணமாக மேஜர் ஆனவர்களின் மணமுடிவுக்கு மதிப்பளித்து, அவர்கள் விரும்புபவர்களைத் திருமணம் செய்து இணைத்து வைக்கும் நீதிமன்றம், அப்பெண்களின் வாக்குமூலத்திற்குப் பின்னரும் வழக்கைத் தள்ளுபடி செய்யாமல், அவர்களைப் பெற்றோருடன் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், காவல்துறை அவ்விளைஞர்களுக்கு எதிராக கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகவும் வழக்குப் பதிவு செய்தது.

ஆரம்பத்தில் முதல் தகவலறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வேளையில், "வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களுக்கு எதிராக அப்பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்" எனக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால், இதனை அப்பெண்கள் மறுத்ததோடு, தங்கள் "சொந்த விருப்பத்தின் பேரிலேயே திருமணம் புரிந்ததாகவும் தங்களை எவரும் மதம்மாறக் கட்டாயப்படுத்தவில்லை" என்றும் காவல்துறை தாங்கள் கூறாததை எழுதியுள்ளதாகவும் மறுத்திருந்தனர். இருப்பினும் காவல்துறை அவ்விளைஞர்கள் மீதான வழக்கைத் தொடர்ந்தது.

இவ்வழக்கின் மீதான முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வேளையிலேயே, உச்சநீதி மன்றத்தைத் தொடர்ந்து கேரள உயர்நீதி மன்றமும் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் விதத்திலான ஆட்சேபகரமான கருத்துகளைத் தன் உத்தரவில் கூறியுள்ளது.

கேரள உயர்நீதி மன்றம் தன் உத்தரவில், "முஸ்லிம் இளைஞர்கள் மற்ற சமுதாயப் பெண்களிடம் காதலிப்பது போன்று நடித்துப் பின்னர் இஸ்லாமிய மதத்துக்கு மதமாற்றம் செய்கின்றனர். இதற்காக அவர்களுக்குக் கணிசமான பணம் கிடைக்கின்றது. இயக்கங்களும் சில நபர்களும் இத்திட்டத்தை நடைமுறைபடுத்தச் செயல்படுகின்றனர். இவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் உதவியும் கிடைத்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் பெண்கள் பிரிவு தலைவர் கதீஜா இப்படிப் பட்ட பெண்களை நேரடியாகச் சந்தித்துள்ளார். அது மட்டுமின்றி பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் தொண்டர்களும் இப்பெண்களைச் சந்தித்துள்ளனர்" என்று நீதிமன்றம் உத்தரவின் போது கூறியது.

"மத்திய அரசின் தலையீடும் இவ்விஷயத்தில் தேவை. கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பது தொடர்பான மத்திய அரசின் நிலைபாட்டை விவரித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட வேண்டும்" எனவும் ஆலோசனை கூறிய நீதிமன்றம், "இவ்வாறு செயல்படும் 'லவ் ஜிஹாத்' மற்றும் 'ரோமியோ ஜிஹாத்' ஆகிய இயக்கங்களின் செயல்பாட்டையும் அந்த இயக்கங்களின் நோக்கம், அமைப்பு, பின்பலம், கேரளத்திற்கு வெளியேயும் சர்வதேச அளவிலும் இவ்வியக்கங்களின் தொடர்புகள், பொருளாதார அடிப்படை, வெளிநாட்டுப் பொருளாதார உதவி, கள்ளநோட்டு-கள்ளக்கடத்தல்-போதைப் பொருள்-தீவிரவாத அமைப்புளுடனான தொடர்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள இவ்விஷயங்கள் தொடர்பான வழக்குகளின் கணக்கு, மதமாற்றத்திற்கு இரையான பள்ளி-கல்லூரி மாணவிகளின் எண்ணிக்கை போன்ற விஷயங்களை உட்படுத்தி டி.ஐ.ஜியும் மத்திய உள்துறை அமைச்சகமும் மூன்று வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" எனக் கூறி முன்ஜாமீன் வழக்கை இரு வாரங்களுக்குத் தள்ளி வைப்பதாக உத்தரவிட்டுள்ளது.

1. இரு இளைஞர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் பாதிக்கப்பட்டதாக சேர்க்கப்பட்டுள்ள இரு பெண்களும் வயதுக்கு வந்த மேஜர்களாகும்.

2. அவ்விரு பெண்களும் தாங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் மதம் மாறி, முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் புரிந்ததாக நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் கொடுத்துள்ளதோடு தங்கள் கணவர்களுக்கு எதிராகத் தங்களிடம் எவ்விதப் புகாரும் இல்லை என்றும் மறுத்திருக்கின்றனர்.

இவ்வளவு தெளிவாக வழக்கு தொடுக்கப்பட்ட இளைஞர்களுக்குச் சாதமாக வழக்கில் வாதிகளாகச் சேர்க்கப்பட்டவர்களே கூறிய பின்னரும் அவர்கள் மீதான வழக்கு, பொய் வழக்கு என அப்பட்டமாக தெரிந்த பின்னரும் வழக்கைத் தள்ளுபடி செய்யாததோடு, முன் ஜாமீனும் வழங்காமல் வழக்கை மாற்றி வைத்து சட்டத்தை மீறியுள்ளது கேரள உயர் நீதிமன்றம்.

அத்தோடு நின்றிருந்தால் கூட, முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக எப்போதும் போல் அரசு நிர்வாகங்கள் செயல்படுவது தானே என முஸ்லிம் சமுதாயம் சமாதானமடைந்திருக்கும். ஆனால், அனைவருக்கும் சமமான நீதி, நியாயத்தை வழங்க வேண்டிய பாரபட்சமற்ற நீதித்துறை கூறிய கருத்துகளும் அரசுக்கு நீதித்துறை தானே முன்வந்து வழங்கிய உத்தரவும் மீண்டுமொரு "நான் குதிருக்குள் இல்லை" என்ற வேஷத்தை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பெண், கேரள மாநிலக் காவல்துறை ஐ.ஜி ரேங்கில் உள்ள ஓர் அதிகாரியின் நெருங்கிய உறவினராவார். மற்றொரு பெண், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்பெஷல் ப்ராஞ்ச் அலுவலகத்தில் பணி புரியும் ஓர் அதிகாரி மற்றும் கேரள மாநில பாஜக மாநிலத் தலைவர் ஆகியோரின் குடும்பத்தவராவார். இவர்களின் நெருக்குதலிலேயே இவ்விரு இளைஞர்களுக்கு எதிராக பொய் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதும் நீதிதுறையினுள் புகுந்துள்ள கறுப்பு ஆடும் தலையாட்டி இருப்பதும் இதிலிருந்து வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

முஸ்லிம்களைச் சமூகத்தின் முன்னிலையில் குற்றவாளி கூண்டில் நிறுத்தும் தீராத ஆசையில், சங்கபரிவாரம் உருவாக்கிய ஒரு வாசகத்தை அதே வடிவில் பயன்படுத்திய கேரள உயர்நீதி மன்றத்தில் அமர்ந்திருக்கும் நீதிபதி கெ.டி. சங்கரன், தன் வருகையின் ஆரம்ப இடம் எது என்பதைத் தெளிவாக வெளிச்சமிட்டு காட்டியுள்ளார். "மதமாற்றம் நடத்துவதற்காக பள்ளி-கல்லூரி கேம்பஸ்களை மையமாக்கி லவ் ஜிஹாத் என்ற இயக்கம் செயல்படுவதாக" நீண்டகாலமாக சங்கபரிவார அமைப்புகள் நடத்திய பிரச்சாரத்தில் பயன்படுத்திய அதே வாசகத்தை எவ்விதத் தயக்கமும் இன்றி அப்படியே எடுத்தாண்டு, இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறை டி.ஜி.பிக்கு நீதிபதி சங்கரன் உத்தரவிட்டுள்ளார்.

கொள்கையையும் கோட்பாட்டையும் கட்டிக்காக்கவும் அக்கிரமம், அநியாயங்களுக்கு எதிராக நீதி, நியாயத்தைப் பாதுகாத்து அனைத்து மக்களுக்கும் சமநீதியை நிலைநாட்டவும் நடத்தும் பல்வேறு வழியிலான முயற்சிகளுக்கே இஸ்லாத்தில் "ஜிஹாத்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இறைத்தூதரும் முஸ்லிம் சமுதாயமும் மிகவும் மேன்மையானதாக கருதும் இச்சொல்லைச் சமூகத்தின் முன்னிலையில் மோசமானதாக சித்தரிக்கும் நோக்குடனே சங்கபரிவாரம் இது போன்ற வாசகங்களை உருவாக்குகின்றது.

இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பிரச்சாரம் நடத்துவதற்காகவும் தங்களின் ஹிந்துத்துவ அஜண்டாவைச் செயல்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளை மூடி மறைப்பதற்குமே "லவ் ஜிஹாத்" என்ற வாசகத்தை சங்கபரிவாரம் உருவாக்கி, சமூகத்தில் பரவவிட்டது. சில மாதங்களுக்கு முன்னர், சில சங்கபரிவார அமைப்புகள் இதே வாசகத்தைப் பயன்படுத்தித் துண்டு பிரசுரங்களும் சுவர் விளம்பரங்களும் பிரச்சாரங்களும் நடத்தியிருந்தன.

அநாவசிய விவாதங்களை உருவாக்க வேண்டாம் என நினைத்தோ என்னமோ முஸ்லிம்களிடமிருந்து சங்கபரிவாரத்தின் இச்சொல் பிரயோகத்துக்கு எதிராக எவ்வித எதிர்ப்புகளும் அச்சமயங்களில் எழவில்லை. அல்லது சங்கபரிவாரத்தின் எப்போதும் போலான கடைசரக்கு என சமுதாயம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், எல்லா மக்களுக்கும் சமநீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய நீதித்துறை, சங்கபரிவாரம் உருவாக்கிய அதே வாசகத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் சமுதாயத்தினை அவமானப்படுத்த முயன்றது முஸ்லிம்களுக்கு இடையில் மிகக் கடுமையான எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.

இதற்கிடையில் "லவ் ஜிஹாத் அமைப்புக்கும் பாப்புலர் ஃப்ரண்டிற்கும் இடையிலுள்ள தொடர்பைக் குறித்து விசாரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைக் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரிடம் கருத்து கேட்டபோது, அவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக கருத்துக் கூறியுள்ளனர் (விரிவாகப் பெட்டிச் செய்தியில்).

மடியில் கனமுள்ளவர்களுக்கே வழியில் பயமிருக்கும்! லாவ்லின் ஊழல் வழக்கில் கேரள கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிணராய் விஜயன் சேர்க்கப்பட்டபோது, அதனை எதிர்த்து, கேரளத்தைக் கம்யூனிஸ்ட் கட்சியினர் அல்லோகல்லோலப் படுத்தினர். சிபிஐக்கு எதிராகத் தரக்குறைவான வார்த்தைகளால் அர்ச்சிக்கவும் அவர்கள் தவறவில்லை. அதே போன்றே சில சங்கபரிவார அமைப்புகள் மீதும் காஞ்சி மடாதிபதி காமகோடி மீதும் வழக்குகள் தொடரப்பட்ட வேளைகளில், அவ்விசாரணைகளைத் தடுத்து நிறுத்தவும் அவ்வழக்குகளை விசாரித்த அதிகாரிகளுக்குக் கொலைமிரட்டல்கள் வரை விடுக்கப்பட்டதும் நாடறிந்ததாகும். இவ்வகையான தேசப்பற்றை(!) இவர்கள் வெளிப்படுத்தும் அதே வேளையில், பயங்கரவாதம் தீவிரவாதம் என மக்களைப் பயமுறுத்தும் சொற்களால் மக்களிடையே சங்கபரிவாரத்தாலும் அரசு இயந்திரங்களாலும் ஊடகங்களாலும் அறிமுகப்படுத்தப்படும் இது போன்ற இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் மீது விசாரணை என அறிவிக்கப்பட்டால் முழு ஒத்துழைப்பு நல்கி தங்கள் தேசவிரோத(!) செயல்பாட்டைத் தெளிவித்து வருவது வியப்பளிக்கக் கூடியதாகும்!

ஜிஹாத் என்ற பரிசுத்தமான சொல்லுடன் லவ்(காதல்) என்ற சொல்லைச் சேர்த்து, ஆபாசப்படுத்த சங்கபரிவாரம் முயன்றது என்றால், ஆர்.எஸ்.எஸ்ஸை விட ஒரு படி மேலாக நீதித்துறை "லவ் ஜிஹாத்" என்பதுடன் "ரோமியோ ஜிஹாத்" என்ற புதிய ஒரு நையாண்டி வாசகத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சங்கபரிவாரம் ஒரு படி குதித்தால் அதனை விட இரண்டு மடங்கு குதிக்க தாங்கள் ரெடி என இந்திய நீதித்துறை செயலால் வெளிப்படுத்தியுள்ளது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளக் கல்லூரி காம்பஸ்களில் முஸ்லிமல்லாத பெண்கள் இஸ்லாம் அல்லாத வேறு மதங்களில் உள்ள இளைஞர்களை விரும்பி திருமணம் புரிவது சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகளாகும். இருப்பினும் இதுநாள் வரை இது ஒரு சமூகப் பிரச்சனையாக நீதிமன்றங்களிலோ அரசியல்வாதிகளிடமோ விவாதப்பொருளாகி இருக்கவில்லை. அதே சமயம், அப்பெண்கள் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை மார்க்கமாக தேர்வு செய்த உடன், மிகப் பெரிய சமூகப்பிரச்சனையாக அது ஊதிப் பெரிதாக்கப் பட்டுள்ளது.

அத்தோடு நீதிமன்றமே பிரபலமான ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயர் எடுத்துக் கூறி, அதனை மோசமானதாக சித்தரிக்க முயன்றிருப்பதும் இயல்பான ஒன்றல்ல.

"லவ் ஜிஹாத்" எனும் இல்லாத ஓர் இயக்கத்தை - சங்கபரிவாரம் உருவாக்கி விட்ட கற்பனைப் பெயரை, தற்போது அகில இந்திய அளவில் அரசியலிலும் இறங்க தீர்மானித்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய சமுதாய அமைப்போடு தொடர்பு படுத்தி, நீதித்துறை இழுத்து விட்டிருப்பது திட்டமிட்ட சங்கபரிவாரத்தின் சதிச்செயல் என்ற சந்தேகத்தை முஸ்லிம் சமுதாய மக்களிடையே அதிக அளவில் கிளப்பியுள்ளது (முஸ்லிம் சமுதாயத் தலைவர்களின் கண்டனங்களைப் பெட்டிச் செய்திகளில் காண்க).

நீதிமன்றத்தின் இந்த அடாவடித்தனமான முஸ்லிம் சமுதாயத்தின் மீது சுமத்தியுள்ள அநீதமான கருத்துருவாக்கப் பின்னணியினைக் குறித்து ஆராய்ந்தால், மேலும் அதிர்ச்சி அதிகமாகின்றது!.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு, கேரளத்திலிருந்து இயங்கிய என்.டி.எஃப், தமிழகத்திலிருந்து இயங்கிய மனித நீதிப் பாசறை, கர்நாடகத்திலிருந்து இயங்கிய கே.எஃப்.டி என்ற கர்நாடகா ஃபெர்ட்டனிட்டி ஃபாரம் ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து தென்னிந்திய அளவில் உருவாக்கிய முஸ்லிம் சமுதாயத்துக்கான சமூகநீதியை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட கூட்டு அமைப்பாகும். பின்னர், அரசியலில் களமிறங்கத் திட்டமிட்ட இந்த அமைப்பு, சில மாதங்களுக்கு முன் கோழிக்கோட்டில் நடத்திய பிரமாண்ட பேரணியிலும் மாநாட்டிலும் மேலும் சில வட இந்திய மாநிலங்களில் இயங்கும் முஸ்லிம் அமைப்புகளும் இணைந்து கொண்டன.

இவ்வாறு மிகத் தெளிவாக முஸ்லிம் சமுதாயத்திற்கான சமூக நீதியைப் பெறும் நோக்கில் திட்டமிட்டு கட்டமைக்கப்படும் இந்த அமைப்பு, பெண்கள் அமைப்பு, கேம்பஸ்களில் மாணவர் அமைப்பு எனப் பல நிலைகளிலும் தங்களின் செயல்பாட்டைச் சிறிது சிறிதாக விரிவுபடுத்தி வருகிறது.

இந்நிலையிலேயே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் அதன் பெண்கள் பிரிவுத் தலைவியும் இந்த லவ், ரோமியோ விவகாரத்தோடு இணைக்கப் பட்டு, கேரள உயர் நீதிமன்றத்தால் வரம்பு மீறி அநீதமான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரம், முஸ்லிம் சமுதாயத்தின் மீதான சங்கபரிவாரத்தின் திட்டமிட்டத் தாக்குதல்களிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் இந்த அமைப்பை அழித்தொழிக்க, சங்கபரிவாரம் பலகாலமாகப் பல பொய்ச் செய்திகளை இந்த அமைப்பின் மீது பரப்பி வருவது அனைவரும் அறிந்த விஷயமாகும்.

தாங்கள் செய்யும் பல நிழலான செயல்களை முஸ்லிம்கள் மீதும் இஸ்லாமிய அமைப்புகளின் மீதும் சுமத்தி, முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பதில் சங்கபரிவாரம் மிகப் பெரிய வெற்றியை இந்தியாவில் அடைந்துள்ளதை அனைவரும் நினைவில் இருத்த வேண்டும்.

அவற்றில் சில பயங்கரவாதச் செயல்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அவை மழுங்கடிக்கப்பட்டு, அவற்றில் தொடர்புடையவர்களாக பின்னர் கைது செய்யப்பட்ட சங்கபரிவார பிரதிநிதிகள் தண்டனையிலிருந்தும் மக்களின் கவனத்திலிருந்தும் திசை திருப்பப்பட்டு பாதுகாப்பாக நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இதற்கு உதாரணமாக, தென்காசியில் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகளே தங்களது சொந்த அலுவலகத்துக்குக் குண்டு வைத்து விட்டு அதனை முஸ்லிம்கள் மீது கட்டிவைக்க முயன்றதும் பின்னர் உண்மை வெளிப்பட்டுபோய் கேவலப் பட்டு நின்றதும் நாடறிந்த உண்மை. ஆனால், அந்த வழக்கு ஊடகங்களில் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் செய்ததாக வெளியான போது இடம் பிடித்ததைப் போன்ற முக்கியத்துவம் உண்மையான சங்கபரிவார ஏஜண்டுகள் கைது செய்யப்பட்டபோது முக்கியத்துவம் கொடுக்கப்படாததோடு, அவ்வழக்கே தேய்ந்து, இன்று அவ்வழக்கு நடைபெறுகிறதா? என்பதே தெரியாத நிலையில் உள்ளது.

அதே போன்று மாலேகானில் சிமி அலுவலகம் முன்னிலையில் குண்டு வைத்த, இந்துத்துவ தீவிரவாதிசாமியாரிணி ப்ரக்யா சிங், அந்தக் "குண்டுவெடிப்புக்குக் காரணம் சிமிதான்" என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, ஊடகங்களும் காவல்துறையும் முஸ்லிம்களை வாட்டி எடுத்தன. பின்னர் நடுநிலையாகச் செயல்பட்ட காவலர்கார்கரேயின் உதவியால் உண்மை வெளியான பின்னர், சங்கபரிவாரத்தின் தீவிரவாதத்தைக் குறித்து இன்று வாய் திறப்பார் யாருமின்றி, தீவிரவாதி ப்ரக்யா சிங் உல்லாசமாக இருந்து வருகிறார்.

அதே போன்று குஜராத்தில் நரவேட்டை மன்னன் மோடி தலைமையில் அப்பட்டமாக எரித்தும் வெட்டியும் சுட்டும் 3000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்றொழித்து விட்டு அதற்குக் காரணம் அதற்கு முன்னர் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமே காரணம் என்றும் அதனைச் செய்தவர்கள் முஸ்லிம்கள் தான் என்றும் வகையாகப் பொய் வியாக்கியானம்சங்கபரிவாரத்தால் அவிழ்த்து விடப்பட்டது. இன்று குஜராத்தில் நரவேட்டையாடிய கும்பல் அரசுப் பாதுகாப்புடன் சுகமாகச் சுற்றி வருகிறது.

இவ்வாறு தாங்கள் செய்யும் செயலை முஸ்லிம்கள் தலையில் கட்டி வைப்பதிலும் தாங்கள் செய்யும் படுபாதகச் செயல்கள் வெளியே வராமலிருக்க பொய்த் தகவல்களை முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் அமைப்புகள் மீதும் பரப்பி முஸ்லிம் சமுதாயத்தின் மீதே ஊடகம், காவல்துறை, நீதித்துறை, உளவுத்துறை, மக்கள் என அனைவரின் கவனமும் பார்வையும் இருக்கும் விதத்தில் பார்த்துக் கொள்வதும் அதன் மறைவில் தாங்கள் செய்யும் அராஜக, அட்டூழியங்களை எவருடைய கவனத்தையும் ஈர்க்கா வண்ணம் செய்து முடிப்பதிலும் சங்கபரிவாரம் மிகத் திறமையாக செயல்பட்டு வருவது கண்கூடு.

சங்கபரிவாரத்தின் முந்தைய பல சதிச் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டால், பத்தனம் திட்டை கல்லூரி நிகழ்விலும் அதே போன்றதொரு திட்டமிட்ட சதியே நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதிப் படுகிறது.

சங்கபரிவாரத்தின் ஒரு சிறப்புப் பிரிவாக, "முஸ்லிம் பெண்களைக் காதல் என்ற பெயரில் மயக்கிச் சீரழித்து, அவர்களை இந்து மதத்துக்கு மாற்றுவதற்கும் அல்லது குறைந்தபட்சம் முஸ்லிம் பெண்களின் வயிற்றில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் இந்துவாகப் பிறக்க வைப்பதற்கும்" நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு ரோமியோ இளைஞர் பட்டாளம் அளவுக்கதிகமாக வாரி இறைக்கப்பட்ட பணபலத்துடன் இயங்கி வருவதாக பல்வேறு முஸ்லிம் அமைப்புகளால் சங்கபரிவாரின் சுற்றறிக்கைச் சான்றோடு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகாத நடவடிக்கையை மக்கள் மத்தியிலிருந்து திசை திருப்ப வேண்டுமெனில், அல்லது குறைந்த பட்சம் இந்துக்களிடையே அதன் இத்தகைய கேடுகெட்ட செயலுக்கு நியாயம் கற்பிக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு முஸ்லிம் அமைப்பு பலிகடாவாக்கப்பட வேண்டியது கட்டாயமாகும் என்பது சங்கபரிவாரத்தின் திட்டமாகும்.

எவ்வாறு சங்கபரிவாரத்தின் திட்டமிட்ட தீவிரவாதச் செயல்களுக்கு முஸ்லிம் அமைப்புகள் பலிகடாவக்கப்படுகிறதோ அதே போன்று அதன் இத்தகைய கேடு கெட்ட, கீழ்தரமான செயல்பாட்டிற்கும் ஒரு முஸ்லிம் அமைப்பு பலிகடாவாக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். அதற்காக சங்கபரிவாரத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை அமைப்பே இந்த லவ் ஜிஹாத் அமைப்பாகும். அதனுடன் ஒரு கல்லில் பல மாங்காய் என்பது போல், தங்களுக்குக் கேரளாவில் மட்டுமின்றி இந்திய அளவில் சிம்ம சொப்பனமாக வளர்ந்து வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையும் சிமியைப் போன்று இல்லாமல் அழித்தொழிக்கும் நோக்குடன், பாரபட்சமில்லாமல் செயல்பட வேண்டிய நீதித்துறையில் கறுப்பு ஆடுகளைப் புகுத்தித் தங்கள் திட்டத்தைச் செயல்படுத்துவற்குப் பயன் படுத்திக் கொள்ள முயன்று வெற்றியும் பெற்று விட்டதாகத் தோன்றுகிறது. ஆனால் அது தற்காலிக வெற்றியா? நிரந்தர வெற்றியா? என்பது போகப் போகப் புரியும்.

எது எப்படி இருந்தாலும் முஸ்லிம்களின் ஒரே நம்பிக்கையான நாட்டு மக்கள் அனைவருக்கும் சமநீதியை எவ்விதப் பாரபட்சமும் இல்லாமல் வழங்க வேண்டிய நீதித்துறையும் சிறிது சிறிதாக இவ்வாறு களங்கம் அடைந்து வருவது நல்ல அறிகுறியல்ல.

அரசின் எல்லாத் துறைகளிலும் சங்கபரிவார வெறியர்கள் புகுந்துள்ளனர் என்பது நாடறிந்த உண்மை தான். ஆனால், அது நீதித்துறை முழுவதும் புகுந்து செல்லரித்து அழிக்குமானால், கதி கெட்டு அழிவின் விளிம்புக்குச் செல்லும் சமுதாயத்தின் கோபக்கனல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கூற இயலாது! அதனை உணர்ந்து ஆரம்பத்திலேயே நீதித்துறையைத் தூய்மைபடுத்துவது மத்திய-மாநில அரசுகளின் கடமையாகும்!





இந்த இடுகையின் இணைப்புகள் edit post


ஆந்திராவின் கவர்ச்சி புயல்! மனவாடுகளின் மச்ச கண்னி ஸ்ரீஸ்ரீ அன்னை அனுஷ்கா அவர்கள் தமிழ்கத்தையும் கலக்கி வருவது அனைவரும் அறிந்ததே. தற்ப்போது தான் அவர் தளபதி நடிக்கும்? வேட்டைகாரன் மூலமாக தமிழில் அறிமுகமானாலும் அருந்ததி என்ற திரைகாவியம் மூலம் ஏற்கனவே நமக்கு அறிமுகமானவர்தாம். அன்னாரின் கலைச் சேவையை பார்த்து பிரமித்த நம் தமிழ் குடிம(மா)க்கள் அவருக்கு கோவில் கட்ட நினைத்து அன்னாரிடம் அனுமதி வேண்டி மனு செய்த போது அவர் அதை நிராகரித்து நம் தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறார்.


ஏற்கனவே குஷ்புக்கு கோவில் கட்டி சாதனை படைத்த தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் ஜென்ம சாபல்யத்தை நிறைவேற்றி வைப்பாரா அனுஷ்கா என்பதுதான் நம் முன் உள்ள மில்லியன் டாலர் கேள்வி.

தளபதியுடன் ஒரு படத்தில் நடத்தற்கே கோவில் என்றால் தொடர்ந்து அவர் தளபதியுடன் நடித்தால்..........?




இந்த இடுகையின் இணைப்புகள் edit post


தலைப்பை பாத்து மிரளாதீர்கள் போக்கிரியில் விஜய் சொல்லும் "நான் ஒரு வாட்டி முடிவு பன்னிட்டா" அந்த டயலாக்கோட ஹிந்தி வெர்ஷன் தான் அது.

பிரபு தேவா இயக்கிய முதல் ஹிந்தி படமான Wanted ல் (போக்கிரி ரீமேக்) சல்மான் கான் அறிமுகமாகும் போது இப்படிதான் பன்ஞ் டயலாக் சொல்லி அறிமுகமாகிறார். மொத்தமே படத்தில் இரண்டு முறைதான் சொல்கிறார். ஒன்று அறிமுகத்தின் போது மற்றொன்று படம் முடியும் போது. தமிழைப் போல அடிக்கடி சொல்லி வெறுப்பேத்தவில்லை. அப்படியே தமிழில் உள்ளதை போலவே எடுத்திருக்கிறார்கள் எந்த மாற்றமுமில்லாமல். அறிமுகப்பாடலில் பிரபு தேவா வந்து ஆடுகிறார். ஆடிக்கொண்டு இருக்கும் போது போன் வருகிறது. யாரு நயன் போன் பன்னிருப்பாங்களோ?

ஒரே ஒரு மாற்றம் பிரகாஷ் ராஜின் பெயர் மாற்றப்பட்டிருப்பதுதான். தமிழில் அலிபாய் ஹிந்தியில் கனி பாய்.படத்தில் காமடி என்று எதுவும் இல்லை சிங்கி மங்கி கேரக்ட்டருக்கு யாரும் அகப்படவில்லையா? ஐயோ வடை போச்சே மிஸ்ஸிங். நம்ம வடிவேலையே நடிக்க வைத்திருக்கலாம். காமடிக்காக தமிழில் போலிஸ் துரத்திக் கொண்டு வரும் ஒருவர் வடிவேலுவிடம் அன்னே போலிஸ் கேட்டா எதும் சொல்லாதீங்கன்னு சொல்லிட்டு ஓடுவாரே அந்த காட்சியை அப்படியே சுட்டு வைத்திருக்கிறார்.

ஆயிஷா டாக்கியா தான் இதில் அசின் வேலையை பார்த்திருக்கிறார், அதாவது ஹிரோயின் பரவாயில்லை. அந்த வில்லன் இன்ஸ்பெக்டர், ஹீரேயின் தம்பி, கமிஷன்ர் என எல்லாம் அப்படியே தமிழில் உள்ளது போலதான். சல்மான் கான் மாற்றம் எதுவும் சொல்லவில்லையா?

சல்மான் கான் உடை கூட அப்படியே தளபதியின் காஸ்டியூமை போலவே உள்ளது. கிளைமேக்ஸில் போலிசு வேசம் சல்மான் கானுக்கு நன்றாகப் பொருந்துகிறது. சண்டையில் சல்மான் சட்டையை கழற்றிவிட்டு சண்டை போடுவார். நல்ல வேளை தமிழி பிரபு தேவா இதைப் போன்று சீன் வைக்க வில்லை.

போலிஸ் உடையில் தளபதியை பார்க்கும் போது அப்படியே வாட்ச்மேன் மாதிரியே இருப்ப்பார் என்ன செய்ய?

இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு போன்றவற்றை தியேட்டரில் படம் பார்த்தவர்களிடம் கேட்டு கொள்ளுங்கள். நான் டிவிடியில் தான் பார்த்தேன், கொஞ்சம் டல்லாதான் தெரிந்தது.



இந்த இடுகையின் இணைப்புகள் edit post